திருவடிசூலம்
சிவமயம்
பெயர்: திருவடிசூலம் ( திருஇடைச்சுரம்)
மூலவர்:ஞானபுரிஸ்வரர்
தாயார்:இமயமடக்கொடியம்மை
தல விருட்சம்:
தீர்த்தம்:
தேவியார் -
வரலாறு :
திருஞானசம்பந்தருக்கு களைப்பு திர ஈசன் தயிர் அளித்த ஸ்தலம்
கோவில் அமைப்பு:
இக்கோயிலில் தெற்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல நேரே விநாயகர் தெற்கு நோக்கி சன்னதி, இடப்பக்கம் 4 கால்மண்டபம் வலப்பக்கம் பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள செல்ல உள் சன்னதியில் தாயார் தெற்கு நோக்கிய இமயமடக்கொடியம்மை தரிசித்து உடன் கிழக்கு நோக்கி அமர்ந்த ஞானபுரிஸ்வர ஐயனை தரிசித்து,
உள் பிராகாரத்தின் வலம் வர சைவ குரவர் நால்வர், விநாயகர், வட கிழக்கு மூலையில் தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து.
கோவிலின் வெளி பிராகாரத்தின் வலம் வர ,கோவிலின் வடக்கே ஓர் அழகிய நந்தவனமும் ,மேற்கு நோக்கி அமைந்த சிவலிங்கத்தை தரிசித்து,
கோவிலின் வட கிழக்கு மூலையில் உள்ள நவக்கிரகத்தை வலம் வந்து . இக்கோவிலில் துவஸ்தம்பம் இல்லை. கோவில் நந்தீஸ்வரர் அருகே மேற்கு நோக்கி தாயாரை தரிசித்தென், தெற்கு நோக்கி முருக பெருமான் சன்னதி
பாடல் வகை:
தேவாரம் (1.78 திரு இடைச்சுரம்)திருஞானசம்பந்தர்(பண் - குறிஞ்சி)
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
திருச்சிற்றம்பலம்
அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 7km வடகிழக்கே அமைந்துள்ளது..
வழி:
பயண அனுபவம் :
காலை 5.20 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 6.00 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 8.10 க்கு அடைந்தேன். செங்கல்பட்டு - திருபோரூர் சாலை வழியில் உள்ள திருவடிசூலம் அடைய , நடைபாதையாக செங்கல்பட்டு,வல்லம்,ஆலப்பாக்கம், குன்னவாக்கம், பொருத்தவாக்கம், புலிக்குடிவனம் வழியாக திருவடிசூலம் அடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்
சிவமயம்
பெயர்: திருவடிசூலம் ( திருஇடைச்சுரம்)
மூலவர்:ஞானபுரிஸ்வரர்
தாயார்:இமயமடக்கொடியம்மை
தல விருட்சம்:
தீர்த்தம்:
தேவியார் -
வரலாறு :
திருஞானசம்பந்தருக்கு களைப்பு திர ஈசன் தயிர் அளித்த ஸ்தலம்
கோவில் அமைப்பு:
இக்கோயிலில் தெற்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல நேரே விநாயகர் தெற்கு நோக்கி சன்னதி, இடப்பக்கம் 4 கால்மண்டபம் வலப்பக்கம் பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள செல்ல உள் சன்னதியில் தாயார் தெற்கு நோக்கிய இமயமடக்கொடியம்மை தரிசித்து உடன் கிழக்கு நோக்கி அமர்ந்த ஞானபுரிஸ்வர ஐயனை தரிசித்து,
உள் பிராகாரத்தின் வலம் வர சைவ குரவர் நால்வர், விநாயகர், வட கிழக்கு மூலையில் தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து.
கோவிலின் வெளி பிராகாரத்தின் வலம் வர ,கோவிலின் வடக்கே ஓர் அழகிய நந்தவனமும் ,மேற்கு நோக்கி அமைந்த சிவலிங்கத்தை தரிசித்து,
கோவிலின் வட கிழக்கு மூலையில் உள்ள நவக்கிரகத்தை வலம் வந்து . இக்கோவிலில் துவஸ்தம்பம் இல்லை. கோவில் நந்தீஸ்வரர் அருகே மேற்கு நோக்கி தாயாரை தரிசித்தென், தெற்கு நோக்கி முருக பெருமான் சன்னதி
பாடல் வகை:
தேவாரம் (1.78 திரு இடைச்சுரம்)திருஞானசம்பந்தர்(பண் - குறிஞ்சி)
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
திருச்சிற்றம்பலம்
அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 7km வடகிழக்கே அமைந்துள்ளது..
வழி:
பயண அனுபவம் :
காலை 5.20 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 6.00 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 8.10 க்கு அடைந்தேன். செங்கல்பட்டு - திருபோரூர் சாலை வழியில் உள்ள திருவடிசூலம் அடைய , நடைபாதையாக செங்கல்பட்டு,வல்லம்,ஆலப்பாக்கம், குன்னவாக்கம், பொருத்தவாக்கம், புலிக்குடிவனம் வழியாக திருவடிசூலம் அடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்