Sunday, 11 January 2015

திருக்கச்சூர்- I

திருக்கச்சூர்

சிவமயம்

பெயர்: திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: கச்சபேஸ்வரர்
தாயார்: அஞ்சனாட்சி

பிற பெயர்கள்(மூலவர்):தினம்விருந்திட்டநாதர்,விருத்திட்ட ஈஸ்வரர்
பிற பெயர்கள்(தாயார்):கன்னியுமையம்மை,சுந்தர வள்ளி

புராண பெயர்கள்:

தல விருட்சம்: கல்லால மரம்.

தீர்த்தம்: கூர்ம (ஆமை) தீர்த்தம்


வரலாறு:

கச்சபேஸ்வரர் திருக்கோயில்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது.




விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக அஜபா நடனம் ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் உபயவிட தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு. அருணகிரியார் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். தலவிருட்சம் கல்லால மரம் என்பதால் இக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உள்ளது.

கோவில் அமைப்பு:

கச்சபேஸ்வரர்  கிழக்கு நோக்கி தனி சன்னதி.
அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள்.
மகாகணபதி கிழக்கு நோக்கி தனி சன்னதி,
வள்ளி,தெய்வானை முருக பெருமானுடன் கிழக்கு நோக்கி தனி சன்னதி.
 
விருத்திட்ட ஈஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி.

உடன்  அருகே சுந்தர மூர்த்தி வடக்கு  நோக்கி தனி சன்னதி.



பைரவர்  தெற்கு நோக்கி வடகிழக்கில் தனி சன்னதி .

பாடல் வகை:
தேவாரம் (7.41 திருக்கச்சூர்) (சுந்தரர்)

திருக்கச்சூர் ஆலக்கோயில் (பண் - கொல்லிக்கௌவாணம்)

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

சாலக் கோயில் உளநின் கோயில்
அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே.

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேற் பயில்வாரே.


அமைவிடம்:

சிங்க பெருமாள் கோவில் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 2.5 KM வடமேற்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம்: 

ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 10-01-2015 சனி கிழமை திருகச்சூர் கச்சபேஸ்வரர் காணலாம் என முடிவு செய்திருந்தேன்.விக்கி மற்றும் கூகிள் உதவியால் செல்லும் வழி தல வரலாறு முதலியவை திராட்டி நினைவில் வைத்து இருந்தேன்.காலை 4.00 மணியளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மார்க்கமாக சிங்க பெருமாள் கோயில் ரயில் நிலையத்தை காலை 6.10 க்கு சென்றடைந்தேன்.

அங்கிருந்து நடைபாதயாக சென்று கோயிலை அடைந்தேன். கோயில் பூட்ட பட்டிருந்தது உடனருக்கே விசாரித்து கோயில் 8 மணி அளவிலே திறக்கபடும் என அறிந்து,அருகில் உள்ள மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று பின் கச்சபேஸ்வரர் தரிசனம் செய்து ,அருகில் உள்ள செட்டிபுண்ணியம் சென்று யோகஹயக்ரீவர் தரிசனம் செய்து வீடு திரும்பினேன்.












 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment